Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா? எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி!
சென்னை: நடிகர் நவாசுதீனிடம் 30 கோடி ரூபாய் பணமும் 4 பிஹெச்கே வீடும் விவாகரத்து செட்டில்மென்ட்டாக கேட்டதாக வெளியான தகவலை அவரது மனைவி ஆலியா மறுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் ரஜினிக்காந்துடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான விவாகரத்து பிரச்சனைதான் இந்தி சினிமாவில் பெரும் சூடான விஷயமாக சென்று கொண்டிருக்கிறது.
நடிப்புக்கு பிரேக்.. படம் இயக்கப் போகும் பிரபல ஹீரோயின்.. லாக்டவுனில் 2 ஸ்கிரிப்ட் ரெடியாம்ல!
விவாகரத்து நோட்டீஸ்
நவாசுதீன் சித்திக்கும் ஆலியாவும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் ஆலியா. கடந்த 7 ஆம் தேதி தனது வக்கீல் மூலம் விவாகரத்து நோட்டீஸை நவாசுதீனின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்புக்கும் ஆலியாவின் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.
ஆண் நண்பருக்காக?
ஆனால் விவாகரத்து நோட்டீஸ் தொடர்பாக நவாசுதீனின் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் ஆலியா சித்திக் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. அவருடன் சேர்ந்து வாழவே ஆலியா, கணவர் நவாசுதீனிடம் இருந்து விவாகரத்து கேட்பதாக தகவல் வெளியானது.
பொய்யான குற்றச்சாட்டு
ஆனால் இதனை மறுத்த ஆலியா தனக்கு எந்த ஆணுடனும் தவறான தொடர்பும் இல்லை என்றார். மேலும் யாரோ ஒருவரை காப்பாற்ற தன் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை அபாண்டமாக தன் மீது கூறுவதாக கூறினார். மேலும் நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த அதிர்ச்சி உண்மைகளை கூறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
30 கோடி ரூபாய்
இந்நிலையில் ஆன்லைனில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆலியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸின் காப்பி என குறிப்பிடப்பட்டிருந்த அதில், விவாகரத்து தீர்வுக்காக நடிகர் நவாசுதீனிடமிருந்து ஜீவனாம்சமாக 30 கோடி ரூபாய் பணம் மற்றும் 4 பிஹெச்கே பிளாட் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் வதந்தி
மேலும் 2 நிலையான வைப்புத்தொகையாக 20 கோடி ரூபாய் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்காக ஆலியா கேட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை முற்றிலும் மறுத்துள்ளார் ஆலியா. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அவை எல்லாம் வெறும் வதந்தி. அந்த அறிக்கைகள் புனையப்பட்ட நகல் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
|
நிறைய வெளிப்படும்
ஊடங்களில் இருந்து நான் அனுப்பிய நோட்டீஸின் காப்பி இருப்பதாக கூறி எனது வழக்கறிஞர்களுக்கு போன் கால்கள் வருகின்றன. சரிபார்க்கப்பட்டதில் அந்த அறிக்கை ஒரு" புனையப்பட்ட நகல் "என்று தெரிகிறது. இதற்குப் பின்னால் யார் இருப்பார்கள்? ஒருவரை அவமானத்திலிருந்து காப்பாற்ற செய்யும் முயற்சி என வெளிப்படையாக தெரிகிறது இப்போது நிறைய வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.