Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பாதி படத்தை முடித்த நிலையில் திடீர் மரணமடைந்த நடிகர்.. மீண்டும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு!
சென்னை: நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலியான நிலையில் அவர் நடித்த படத்தை மீண்டும் படப்பிடிப்பு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2000ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வல்லரசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிதிஷ் வீரா. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, ராட்சசி, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு
காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிதிஷ் வீரா சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழ் சினிமா அதிர்ச்சி
ஆனால் கடந்த 17 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி நிதிஷ் வீரா உயிரிழந்தார். கூத்துப்பட்டறையில் நடிகராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய நிதிஷ் வீரா, பிரபல பத்திரிக்கையாளர் ஞானி நாடகக்குழுவில் முக்கிய நடிகராக வலம் வந்து பின்னர் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
கொரோனாவால் மரணம்
வெற்றிமாறனின் அசுரன் படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் நிதிஷ் வீரா. 48 வயதான நிதிஷ் வீராவின் மரணம் பலரையும் அதிர்ச்சியுல் ஆழ்த்தியது. நிதிஷ் வீரா 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார்.
சாணிக்காயிதம் படம்
அந்த வகையில் செல்வராகவனின் சாணிக்காயிதம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். படத்தின் பாதிக் காட்சிகளில் நடித்து முடித்திருந்த நிலையில் நிதிஷ் வீரா திடீரென மரணமடைந்தார்.
மீண்டும் படப்பிடிப்பு
இதனால் அவர் நடித்த காட்சிகளை வேறு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் வீரா லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதேபோல் நீரோ என்ற படத்திலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.