Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாண்டியன் சுகவீனம் - மதுரையில் சிகிச்சை
நடிகர் பாண்டியன், மஞ்சள் காமாலை காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தற்போது நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியன், பாரதிராஜாவின் கண்ணில் பட்டு, மண்வாசனை படம் மூலம் நடிகரானார். அதன் பின்னர் நிறையப் படங்களில் நடித்தார்.
ஹீரோவாக நீண்ட காலம் தாக்குப் பிடிக்காத பாண்டியன், அதன் பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இடையில் திமுகவில் சில காலம் இருந்தார். பின்னர் அதிமுகவுக்குப் போனார். தீவிர மேடைப் பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.
சமீப காலமாக எங்கும் காணப்படாமல் வீட்டோடு இருந்தார். இந்த நிலையில், இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பாண்டியனுக்கு மஞ்சள் காமாலை வந்து சரியானது.
குடிப்பழக்கம் கொண்டவரான பாண்டியன் அடிக்கடி குடித்ததால், அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் காமாலையும் தாக்கியது.
இதையடுத்து சொந்த ஊரான மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பாண்டியன். அங்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாண்டியன் உடல் நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.