எம் மக்காள்.. விரைவில் நாம் கொண்டாடுவோம்! அதுவரை அமைதி காப்போம்.. பார்த்திபன் டிவிட்ட பாத்தீங்களா!
சென்னை: ஊரடங்கு உத்தரவு குறித்தும் அதற்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்தும் நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றையும் உலுக்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் 7500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 242 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரடவை பிறப்பித்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதியுடன் நாடு முழுவதும் நிறைவடைகிறது. ஆனாலும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஓடிஷா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளது.
மத்திய அரசும் நாடு முழுவதுமான ஊரடங்கை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவத்துறையிரும் மத்திய அரசுக்கு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து டிவிட்டியிருக்கிறார். இதுதொடர்பான அவரது பதிவில், எம் மக்காள் ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு (extended) - உலகடங்கா நோயிலிருந்து விடுபட்டு-மன ஆரோக்கியமும் பண ஆரோக்யமும் செழித்து,அன்றாடம் உழைப்பவர் வாழ்வில் கூட மகிழ்ச்சி நின்றாட விரைவில் நாம்...கொண்டாடுவோம்! அதுவரை அமைதி காப்போம் அடுத்தவருக்கு நம்பிக்கையாகி மனிதம் வளர்போம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











