Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா.. வாயில் விளையாடிய பார்த்திபன்.. விஜய் "சேது" பதி கப்சிப்!
சென்னை: நடிகர் பார்த்திபன், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் குறித்து டிவிட்டியுள்ளார்.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தில் நடிகை மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மதராசப்பட்டினம் படம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.. நடிகை எமி ஜாக்சன் ஓபன் டாக்!
ஃபர்ஸ்ட் லுக்
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இதன் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் இரண்டு விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
50 சதவீதம்
இதனால் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் அரசியலை மையப்படுத்தி உருவாகி வருவதாக தெரிகிறது.
இதன் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிகிறது.
கான்வெர்சேஷன்
இந்நிலையில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் டிவிட்டியுள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபனும், விஜய் சேதுபதியும் பேசிக்கொள்வது போன்று ஒரு கான்வெர்சேஷனை ஷேர் செய்துள்ளார்.
மாஸ்டர் பிளான் என்ன?
அதாவது, "பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு"இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா"ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?
உன் MASTER plan தான் என்ன?" என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு
நடிகர் விஜய் சேதுபதி, மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'க/பெ ரணசிங்கம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துக்ளக் தர்பார் படத்தின் எஞ்சிய 50 சதவீத படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கும் என தெரிகிறது.