Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க காவல் இருந்த அப்பாவி.. நெல்லை சிவா மரணம்.. பார்த்திபன் உருக்கம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவாவுடனான தனது நட்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.
மிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பெரும் கூட்டம்
இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருநெல்வேலி பாஷையில் எதார்த்தமாக பேசும் இவரது பேச்சையும் காமெடியையும் ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் உள்ளது.
மாரடைப்பால் மரணம்
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் நெல்லை சிவா. 60 வயதான நெல்லை சிவா இன்று மாலை 6.30 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் உருக்கம்
அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் நெல்லை சிவா குறித்த பதிவு ஒன்றை உருக்கமாக ஷேர் செய்துள்ளார்.
|
அப்பாவி நெல்லை சிவா
அதாவது, பாத்திரம் வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பவனாக இல்லாமல் பாத்திரத்தையே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கோடி கோடியாக வந்த பணம் கொண்டு மனம் பல வாங்கினேன். நான் தந்த காசோலையை வங்கியில் போட்டு அதை காக்க வங்கி வாசலில் காவல் இருந்த அப்பாவி நெ.சிவா. அவர் பேச நான் சிரிப்பேன். இன்று இல்லை என பதிவிட்டுள்ளார்.
கிணத்தை காணோம் காமெடி
மேலும் இந்த விஷயம் தொடர்பாக நெல்லை சிவா, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியையும் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நெல்லை சிவாவின் கிணத்தை காணோம் காமெடி பெரும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.