Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்!
கேரளாவுக்கு உதவிசெய்ய நடிகர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: கேரள மாநிலத்திற்கு நாம் சேர்ந்து உதவுவோம் என நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலாறு காணாத மழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 300 க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
2 வாரங்களாக பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், கொச்சி ஆகிய மாவட்டங்களில் மேலும் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், பல பிரபலங்கள் கேரளாவிற்கு உதவிகள் செய்ய முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து தன்னார்வளர்களும், தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, "94 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம். நானும் நீங்களும் உதவி செய்திருந்தாலும், நாமாய் செய்ய விரும்பினால் 044 43523255 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இணைந்து துயர்துடைப்போம் என ட்வீட் செய்துள்ளார். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை தொடர்புகொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
94 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம். நானும் நீங்களும் உதவி செய்திருப்பினும்,நாமாய் செய்ய விரும்பினால்,( உதாரணம்=அரிசி வியாபாரி அரிசியும்,துணி வியாபாரி போர்வைகளும்) என்னை 044 43523255-ல்
— R.Parthiban (@rparthiepan) August 15, 2018
தொடர்பு கொள்ளலாம்.(9am-9pm)
இணைந்து துயர் துடைப்போம்