Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்!
கேரளாவுக்கு உதவிசெய்ய நடிகர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: கேரள மாநிலத்திற்கு நாம் சேர்ந்து உதவுவோம் என நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலாறு காணாத மழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 300 க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
2 வாரங்களாக பேரிடர் மீட்புக் குழுவும், ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், கொச்சி ஆகிய மாவட்டங்களில் மேலும் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், பல பிரபலங்கள் கேரளாவிற்கு உதவிகள் செய்ய முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து தன்னார்வளர்களும், தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, "94 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம். நானும் நீங்களும் உதவி செய்திருந்தாலும், நாமாய் செய்ய விரும்பினால் 044 43523255 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இணைந்து துயர்துடைப்போம் என ட்வீட் செய்துள்ளார். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை தொடர்புகொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
94 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம். நானும் நீங்களும் உதவி செய்திருப்பினும்,நாமாய் செய்ய விரும்பினால்,( உதாரணம்=அரிசி வியாபாரி அரிசியும்,துணி வியாபாரி போர்வைகளும்) என்னை 044 43523255-ல்
— R.Parthiban (@rparthiepan) August 15, 2018
தொடர்பு கொள்ளலாம்.(9am-9pm)
இணைந்து துயர் துடைப்போம்