twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெத்த சிறப்பு தரிசனம்.. அத்திவரதரை தரிசித்த பிரபல நடிகர்!

    |

    சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதரை நடிகர் பார்த்திபன் தரிசித்துள்ளார்.

    உலக பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா எட்டாவது நாளாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Actor Parthiban went to Athivaradhar temple for special dharshan

    இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதரை கண்டு தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

    வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள பார்த்திபன் மெத்த சிறப்பு தரிசனம் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actor Parthipan went to Athivaradhar temple for special dharshan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X