Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'நான் நன்றி மறவேன்!' - தனக்கேயுரிய ஸ்டைலில் பார்த்திபன் கவிதை!
சென்னை : நடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். எல்லா விஷயத்திலும் தனக்கென தனித்துவமான ஸ்டைல் வைத்திருப்பவர் பார்த்திபன். தனது பிறந்தநாள் வருவதையொட்டி சமீபத்தில் பார்த்திபன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். குறும்பும் கேலியுமாக, வார்த்தைகளில் விளையாடி அவர் எழுதியிருக்கும் கவிதையில் தெரிகிறது வாழ்க்கைப் பகடி.
'புதிய பாதை வெளியான நாளில் தான் புதிதாய்ப் பிறந்தேன். இப்போது 'உள்ளே வெளியே 2' எடுக்கத் தயார் நிலையில் இருக்கிறேன். தயாரிப்பாளர்தான் சிக்கவில்லை. பாரதிராஜா தொடங்கி இன்று புதிதாய் வந்திருக்கும் டைரக்டர்கள் பலரும் இன்னும் நான் உச்சம் தொடவில்லை என்கிறார்கள்' எனவும் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்துகொண்டுள்ளார் பார்த்திபன்.
சினிமாவிலும், வாழ்விலும் வித்தியாசமான, முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பார்த்திபன் சமூக நோக்கத்திற்காக என்றும் குரல் கொடுப்பவர். கலைத்தாகம் கொண்ட அந்தக் கலைஞனின் பிறந்தநாளில் வாழ்த்துகள் சொல்வோம். அவர் எழுதிய கவிதை கீழே...
ஆயிரம் அடிக்கும் அடியில்
— R.Parthiban (@rparthiepan) November 14, 2017
ஆழ்துளை கலைக்கிணற்றில #ltw pic.twitter.com/2FjfA6b8jL
ஆயிரம் அடிக்கும் அடியில்
ஆழ்துளை கலைக்கிணற்றில்
அகழ்வாய்வு கொண்ட
365 திங்களில்
அதிர்ஷடமெனும்
அபூர்வம் கண்டதில்லை நான்!
விதை புதைத்து
சுரை கொண்டதில்லை,
மரம் விதைத்தே
கனி உண்டிருக்கிறேன்.
பல்வேராய்ச்சியில்
பல்பு எரிந்தது போல...
பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்
நல் முத்துக்களாய்
கைதட்டல்கள் பெறுகிறேன்!
என் படங்களில் சூப்பர்
நட்சத்திரங்கள் நடித்ததில்லை
பிரம்மாண்ட இயக்குநர்களின்
படங்களில் நான் நடித்ததில்லை
இருப்பினும் இயங்குகிறேன்.
இருப்பை சிறப்பாய்
செதுக்கிய சமீபம் KTVI
பிறந்த நாளெனக்கு
14/4/1989(புதிய பாதை)! அடுத்த
பிறந்த நாளென்பது
'உள்ளே வெளியே 2'
வெளியீடும் வெற்றியும்!
தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.
தயாரிப்பாளர் தான்
முயற்'சிக்கவே' இல்லை!
என் இனிய பாரதி
ராசாவும் இசைய
ராசாவும் இன்றை
இளைஞ ராசாக்களும்
வருந்தி வாழ்த்துவது
"தகுதிக்கான உச்சம்
தொடவில்லை" என்பது.
எட்டாத ஸ்தூபம்
கிட்டாத ஸ்தானம்
அதற்கான ஸ்தூலம்
அறியவில்லை நானும்.
ஆனாலும் ஓடுகிறேன்
ஆறாமல் தேடுகிறேன்
அண்ணாந்து பார்க்கிறேநென்
விஸ்வரூப உழைப்பின் வியர்வை
சொட்டு சொட்டாய் நுனி
நாவை நனைக்க- உயிர்
கொள்ளும் சினிமா தாகம்
முன்பினும் மூர்க்கமாய்
மூச்சடக்கி பாய்கிறது.
வெற்றிக்கு உற்றோரே
உங்களின் வாழ்த்து
இன்றும் நாளையுமல்ல
இன்றியமையாதது என்றுமே
என்றறிவேன் நானும்
நன்றி'மறவேன்!!!