Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பைனான்சியர் கடனை அடைக்க முதன்முதலா வாங்கிய பங்களாவை கூட வித்திருக்கேன்.. மனம் திறக்கும் பார்த்திபன்!
சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சினிமா பைனான்சியர்களிடம் வாங்கிய கடனுக்காக தான் முதல் முறையாக வாங்கிய பங்களாவைக் கூட விற்றுவிட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன்சுமை, கந்து வட்டி கொடுமையால் அசோக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கந்துவட்டி கொடுமையால் பறிபோகும் கடைசி உயிர் இதுவாக இருக்க வேண்டும் என்றும் கந்துவட்டியை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அசோக்குமாரின் மரணத்துக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
|
பார்த்திபனின் அனுபவம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் கந்துவட்டி கொடுமையால் தனக்கு நேர்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அன்புச்செழியனும் ஒருவர்..
அதாவது நான் சினிமா பைனான்சியர் பல பேர்கிட்ட வட்டிக்கு பணம் வங்கியிருக்கேன் என அவர் தெரிவித்துள்ளார். அதில் அன்புச்செழியனும் ஒருவர் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பங்களாவைக்கூட வித்திருக்கேன்
வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில் கொடுக்க, தான் முதன்முதலா வாங்குன பங்களாவைக்கூட வித்திருக்கேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் யார்கிட்டேயும் தலைகுனிந்து நின்றதில்லை என்றும் பார்த்திபன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு
அந்த திமிர் என்னை பிடித்திருக்கு என்றும் தனக்கும் அந்த திமிர் பிடித்திருக்கு என்றும் அவர் கூறினார். நான்கு படங்களில் நடித்து கடனை அடைத்துவிட்டு மறுபடியும் படமெடுப்பேன் அதுதான் தனக்கு ஏற்படும் இடைவெளி என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.
சவாலாகதான் எதிர்கொள்கிறேன்..
தான் ஆதங்கப்பட்ட குரல் கொடுப்பது சக நண்பர்களின் பிரச்சனைகளுக்கு தான் என்றும் மற்றபடி தான் சந்திக்கும் பிரச்சனைகளை சவாலாகதான் எதிர்கொள்கிறேன் என்றும் பார்த்திபன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.