Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்!
விசாகப்பட்டினம்: முழு நேர அரசியலில் குதித்துள்ள தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகராக திகழ்பவர் பவன் கல்யாண். 46 வயது பவன் கல்யாண் நம்ம ஊர் தல அஜித்தைப் போல் தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்.
பவர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் (அங்கு பவர்ஸ்டாருக்கு அர்த்தம் வேறு) பவன் கல்யாண் , நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.
த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த அஞ்ஞானவாசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்டார்.
ஜன சேனா என்ற அரசியல் கட்சியை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார் பவன் கல்யான். இப்போது முழு நேர அரசியலில் குதித்துவிட்டார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் தன் கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், சில மர்ம நபர்கள், காரில் விபத்தை ஏற்படுத்தி அல்லது குண்டு வைத்து கொலை செய்துவிடுவோம் என செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார். ஆனால் கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.