நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி.. வீட்டிலேயே குவாரண்டைன்!
சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண்.
ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார் பவன் கல்யாண்.

பல முகங்கள்
இவரை ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர்.
பவன் கல்யாண் நடிகராக மட்டுமின்றி ஸ்க்ரீன் ரைட்டர், ஸ்டன்ட் கோ ஆர்டினேட்டர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார்.

கொரோனா உறுதி
அவருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து பவன் கல்யாண் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பவன் கல்யாண் விரைவில் குணம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்
#GetWellSoonJANASENANI என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். தெலுங்கு சினிமா பிரபலங்களும் பவன் கல்யாண் விரைவில் குணம் பெற வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வக்கீல் சாப்
பவன் கல்யாண் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். கடைசியாக பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வக்கீல் சாப் திரைப்படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











