Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
உயர் ரத்த அழுத்தம்.. நடிகர் ’பவர் ஸ்டார்’ சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ரசிகர்கள் சோகம்
சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லத்திகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்த சீனிவாசன். தனக்குத் தானே பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை கொடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே தான் போட்டி என பல பேட்டிகளை கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.
இன்னொரு வாட்டி பசங்க மேல கை பட்டது.. வாத்தி ரெய்டு வரும்.. மாஸ்டரின் அடுத்த மாஸ் புரமோ ரிலீஸ்!
ரஜினிக்கு போட்டி
நடிகர் ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று ஏகப்பட்ட பில்டப்புகளுடன் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, ஆர்யா சூர்யா, யா யா, தலைவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஷங்கரின் 'ஐ', வாலிப ராஜா என வரிசை கட்டி பல படங்களில் நடித்து வந்தார்.
சந்தானத்துடன் நட்பு
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகராக பவர் ஸ்டார் சீனிவாசனை அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம், தொடர்ந்து தனது பல படங்களில் நடிக்க வைத்து, ரசிகர்கள் மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்று ஒரு தனி இடத்தையும் பெற்றுத் தந்தார்.
மோசடி வழக்குகள்
சினிமா, அரசியல் என டக்கு டக்குன்னு அடுத்த அடுத்த லெவலுக்கு பறந்து கொண்டிருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், திரைப் படங்களுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கொஞ்ச காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த அவர், மீண்டும் நான் திரும்ப வந்துட்டேன் என சொல்லும் அளவுக்கு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் சினிமாவில்
இயக்குநர் ஆர்.எஸ். மணி இயக்கத்தில், ஹீரோவாக மீண்டும் கலக்க உள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த படத்திற்கு 'முருங்கக்காய்' என்ற விவகாரமான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அப்படியே அடல்ட் படம் போல இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சீக்கிரம் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.