Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நான் விருந்தாளியாவே இருந்துட்டு போறேன்' நடிகர் சங்க தேர்தலில் தோல்வி.. பிரகாஷ் ராஜ் உருக்கம்!
சென்னை: தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தான் தெலுங்கு சினிமாவில் விருந்தாளியாகவே இருந்து விடுகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
உருவானது குரூப்பிசம்...ஓப்பனாக பேசிய பிரியங்கா...கவுன்ட்டர் கொடுத்த நிரூப்
இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார்.
ஓட்டுப் போடும் உரிமை
பிரகாஷ் ராஜூக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ் ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. மொத்தம் உள்ள 900 உறுப்பினர்கள் உள்ள தெலுங்கு நடிகர் சங்கத்தில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது.
விஷ்ணு மஞ்சு வெற்றி
அவர்களில் 655 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதில் நடிகர் விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் கிடைத்தன. இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். பிரகாஷ் ராஜ் தோல்வியை சந்தித்தார்.
பிரகாஷ் ராஜ் ராஜினாமா
ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
என் தோல்விக்கு காரணம் இதான்
மேலும் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ், "விஷ்ணு வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள். பிராந்தியவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவை எம்ஏஏ உறுப்பினர்கள் என்னை தலைவராக தேர்வு செய்யாததற்கான காரணம். நான் என்ன செய்ய முடியும்? என் பெற்றோர் தெலுங்கு இல்லை. நான் தொடர்ந்து இங்கு விருந்தினர்தான்.
விருந்தினராகவே இருப்பேன்
விருந்தினராகவே இருந்து தெலுங்கு படங்களில் நடிப்பேன்.
என்றார். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடனான எனது உறவு அப்படியே இருக்கும். நான் இந்த முடிவை மதிக்கிறேன் மற்றும் விஷ்ணுவின் பதவிக்காலம் சிறக்க வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!