Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இனியும் கந்து வட்டியும், தற்கொலையும் தொடரக் கூடாது.. பிரகாஷ் ராஜ்
இனியும் தமிழகத்தில் கந்து வட்டியையும் தற்கொலையையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை: தமிழகத்தில் இனியும் கந்து வட்டியும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், ப்ரொடெக்ஷன் கம்பெனி வைத்திருந்த இவர், மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியனிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். அதற்கு வட்டிக்கு மேல் வட்டிக் கேட்டு அசோக்குமாரை அன்புச்செழியன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் குடும்பத்துக்கு பெண்களையும் பெரியவர்களையும் கேவலமாக பேசியதால் மனமுடைந்த அசோக் குமார் நேற்று அபிராமபுரம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாதுகாப்பு இல்லை
நடிகர் பிரகாஷ் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ் திரையுலகில் மாற்றம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமா துறை உள்ளது.
10 சதவீதம்
கடன் வாங்கித்தான் திரைப்படம் எடுக்கிறோம். பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலையும் தொடரக் கூடாது
இனியும் தமிழகத்தில் கந்து வட்டியும் தொடரக் கூடாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் தொடர கூடாது. பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு யாரும் இல்லை என்ற மனநிலைக்கு வரக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசி தீர்வு காண வேண்டும்.
அரசியலுக்கு வரலாம்
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரலாம். கமலுக்கு சினிமா இல்லாததாலும், ரஜினிக்கு சினிமா இருப்பதாலும்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பத்மாவதி படத்தில் நடித்த தீபிகாவின் மூக்கை அறுப்பேன் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறுவது சரியா.
பெரிய ஆளா?
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கமல் அளித்தால் அவரை தமிழக ஆட்சியாளர்கள் சட்டரீதியாக சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை மிரட்டுவதும் கருத்தே சொல்லக் கூடாது என்பதும் எந்த விதத்தில் நியாயம். கமலையே மிரட்டும் அளவுக்கு இவர்கள் பெரியவர்களா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.