Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இனியும் கந்து வட்டியும், தற்கொலையும் தொடரக் கூடாது.. பிரகாஷ் ராஜ்
இனியும் தமிழகத்தில் கந்து வட்டியையும் தற்கொலையையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை: தமிழகத்தில் இனியும் கந்து வட்டியும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், ப்ரொடெக்ஷன் கம்பெனி வைத்திருந்த இவர், மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியனிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். அதற்கு வட்டிக்கு மேல் வட்டிக் கேட்டு அசோக்குமாரை அன்புச்செழியன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் குடும்பத்துக்கு பெண்களையும் பெரியவர்களையும் கேவலமாக பேசியதால் மனமுடைந்த அசோக் குமார் நேற்று அபிராமபுரம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாதுகாப்பு இல்லை
நடிகர் பிரகாஷ் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ் திரையுலகில் மாற்றம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமா துறை உள்ளது.
10 சதவீதம்
கடன் வாங்கித்தான் திரைப்படம் எடுக்கிறோம். பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலையும் தொடரக் கூடாது
இனியும் தமிழகத்தில் கந்து வட்டியும் தொடரக் கூடாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் தொடர கூடாது. பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு யாரும் இல்லை என்ற மனநிலைக்கு வரக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசி தீர்வு காண வேண்டும்.
அரசியலுக்கு வரலாம்
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரலாம். கமலுக்கு சினிமா இல்லாததாலும், ரஜினிக்கு சினிமா இருப்பதாலும்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பத்மாவதி படத்தில் நடித்த தீபிகாவின் மூக்கை அறுப்பேன் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறுவது சரியா.
பெரிய ஆளா?
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கமல் அளித்தால் அவரை தமிழக ஆட்சியாளர்கள் சட்டரீதியாக சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை மிரட்டுவதும் கருத்தே சொல்லக் கூடாது என்பதும் எந்த விதத்தில் நியாயம். கமலையே மிரட்டும் அளவுக்கு இவர்கள் பெரியவர்களா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.