Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்புக்கு பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்!
Recommended Video
சென்னை : நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான பிரகாஷ்ராஜ் தனது பாதுகாப்புக்காக பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
கடந்த சில மாதங்களாக பிரகாஷ்ராஜ், ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது நண்பரான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து பாஜக-வினரை நேரடியாக எதிர்த்து வருகிறார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சித்த பாஜக எம்பி மீது வழக்கு தொடுத்திருக்கிறார். மதவாதக் கட்சியான பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
"சமீபகாலமாக பாஜக-வினர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பேசி வருகின்றனர். உயிரின் மதிப்பு என்ன என்பது அவர்களைவிட அதிகமாக எனக்குத் தெரியும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் இவர்களால் தீங்கு ஏற்படுமோ என அஞ்சுகிறேன்.
அதனால், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாடிகார்டுகளை நியமித்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ். தற்போது சீருடை அணிந்த பாடிகார்டுகள் பிரகாஷ்ராஜ் செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.