Don't Miss!
- News
குடியரசுத் தலைவர் உரையில் "காசி தமிழ் சங்கமம்".. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சினேகா, பிரசன்னா!
சென்னை : நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பின்னர், கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் அலையின்போது தடுப்பூசிகள் இல்லாததால் தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் மூலமாக மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது..

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் மீண்டும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே ஓராண்டாக தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், 2-ம் அலையின் காரணமாக பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், பல்வேறு கிராமங்களின் சிறப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டியே வந்தனர். இந்நிலையில், மக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னரே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.
Recommended Video
இந்நிலையில், நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் இன்று காலை தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இன்று காலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வலைத்தள பக்கங்களில் வெளியாகி உள்ளது.
-
டாப் ஹீரோக்களால் ஓடிடியிலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பிரச்சினை... யாரை சொல்கிறார் பா ரஞ்சித்?
-
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
-
இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாது.. கடுப்பான தயாரிப்பாளர்.. டார்ச்சர் பண்ணும் டாப் நடிகர்?