Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாக்காளர்கள் முட்டாள்களா.. என்ன சொல்ல வருகிறார் நடிகர் பிரசன்னா
வாக்காளர்கள் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : வாக்காளர்கள் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கு தீர்ப்பை முன்னிலைப்படுத்தி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
நாடே பெரிதும் எதிர்பார்த்த இந்த தீர்ப்பு இப்படி நமத்து போன பட்டாசு மாதிரி ஆகிவிட்ட நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்துகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறுகையில் தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என்று தெரிவித்துள்ளார்.