Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமாவில் களமிறங்கி கலக்க தயாராகும் நடிகர் பிரேமின் மகன் கௌசிக்!
சென்னை: நடிகர் பிரேம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் விக்ரம் வேதா சைமன் தான். பிரேமை நாம் சிறந்த துனை நடிகராக பல படங்களில் பார்த்திருப்போம். இவரது மகனான கௌசிக் சுந்தரம் தற்போது சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார் .
கௌசிக் சுந்தரம் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக ஏவிஎம் தயாரிப்பில் உருவாக்கபட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'நிம்மதி உங்கள் சாய்ஸ்'ல் நடித்திருப்பார்.
இவர் சாய் சுரேஷ் இயக்கத்தில் உருவான குங்கும பொட்டு கவுண்டர் படத்தில் சத்யராஜின் மகனாக சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருப்பார். அந்த படத்தில் சத்யராஜ், ரம்பா,கவுண்டர் மணி,கரண் மற்றும் கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருப்பார்கள்.
இதற்கு பிறகு சினிமாவில் நடிக்காத கௌசிக் கிரிக்கெட்டில் தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார். தனது திறமையின் மூலம் தேசிய அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார். மீண்டும் சினிமா ஆசை அவரை தொற்றி கொள்ள இயக்குனர் படிப்பை படித்து விட்டு ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் .
அதற்கு பின் எம் .அறிவழகன் இயக்கத்தில் உருவான அடுத்தசாட்டை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .இந்த படத்தில் சமுத்திரகனி, அதுல்யா, தம்பி ராமையா ஆகியோருடன் நடித்து இருந்தார் .அடுத்தடுத்து தனது நடிப்பு திறனை மெருக்கேற்றி கௌசிக் தொடர்ந்து சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்படுகிறது .
சமீபத்தில் கௌசிக் சுந்தரம் பற்றி ஒரு தனியார் நாளிதழில் வந்த பேட்டியில் இவருக்கு குட்டி கமல் என்று தலைப்பு வைக்கபட்டு வெளியிடப்பட்டது .இவர் மென்மேலும் நல்ல நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி மேலே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இவர் அடுத்த சாட்டை படத்தில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் மிக சரியான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.இதே போல் தனது அடுத்தடுத்த படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஒவ்வொரு தந்தையும் தான் வெற்றி பெற்றதை விட தன் மகன் மிக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று தான் மிகவும் ஆசை படுவார்கள் . அந்த வகையில் பிரேம் அவர்கள் தன் மகனுக்காக எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல் மிக அதிகமானது. இந்த சினிமா உலகம் எத்தனையோ வாரிசு நடிகர்களை கொண்டாடி உள்ளது. அதே வரிசையில் கௌசிக் ஒரு நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துவோம் .