Don't Miss!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொரோனா விழிப்புணர்வு... சென்னை 28 நண்பர்கள் வெளியிட்ட வீடியோ
சென்னை : கொரோனா விழிப்புணர்வுக்காக திரைத்துறையினர் தொடர்ந்து பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
சென்னை 28 படத்தின் முக்கிய நடிகர்கள் மூவர் இணைந்து தற்போது கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக நடிகர்கள் மற்றும் நடிகைகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி ரசிகர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் வீடியோ
இதன்மூலம் மக்களிடம் ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர்கள் தாமாக முன்வந்து பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசியை தாங்கள் போட்டுள்ளதாகவும் பொதுமக்களும் உடனடியாக போடும்படியும் வலியுறுத்தி வருகின்றனர்.
நண்பர்கள் வீடியோ
இந்நிலையில் சென்னை 28 படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்துள்ள நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா மற்றும் அரவிந்த் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ட்விட்டரில் வெளியீடு
இந்த வீடியோவை நடிகர் பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் பேசும் அவர், பாதுகாப்பாக இருக்கவும் மாஸ்க் அணியவும் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் ரசிகர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசும் நிதின் சத்யா, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
நிதின், அரவிந்த் கோரிக்கை
கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து நடிகர் அரவிந்த் பேசுகிறார். அவரும் மாஸ்க், தடுப்பூசி மற்றும் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது உள்ளிட்ட அதே கருத்துக்களை தெரிவித்துள்ளார்.