Don't Miss!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாடகியை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா பிரேம்ஜி? புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை!
சென்னை : நடிகர் பிரேம்ஜி அமரன் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகி உள்ளது.
நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார்
சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். லேட்டஸ்டாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார்.
விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணம்.. சிறப்பு டிபி வெளியீடு.. ராஷ்மிகா, பிரேம்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து!
நடிகர் பிரேம்ஜி அமரன்
பார்ப்பதற்கே அப்பாவி போல இருக்கும் இவர் தான் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி, எப்போதும் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொள்ளும் பிரேம்ஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவரின் திருட்டு முழிக்கே பல ரசிகர்கள் உண்டு. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா...என்ன கொடுமை சார் இதெல்லாம்... என ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது வசனத்தை சொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
எப்போதும் முரட்டு சிங்கிள்
43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என பிரேம்ஜி கூறி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார். ஆனால், பிரேம்ஜியோ இனி கல்யாணமே கிடையாது நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று சோஷியல் மீடியாவில் கூறியிருந்தார்.
காதல் கிசுகிசு
ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற படங்களில் பணியாற்றிய பாடகி வினைதாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினைத்தாவை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன் என்று கூறி இருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி இருவரும் காதலிப்பாக கூறப்பட்டது. பின்னர் அதுவெறும் வதந்தி என்று இருவரும் கூறினர்.
ரகசிய திருமணமா?
இந்நிலையில், பாடகி வினைதா பிரேம்ஜியை கட்டிப்பித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்' என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும் திருமணம் செய்து கொண்டார்களா? என்றும், இப்போது இவர்களுக்கு திருமணம் நடந்தது என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.