Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கோத்தகிரி சொகுசு பங்களாவுக்கு சென்ற நடிகர் ராதாரவி.. வீட்டிலேயே தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை!
சென்னை: சென்னையில் இருந்து கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவிவை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.
Recommended Video
நடிகர் ராதாரவி தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராதாரவி அரசியல் பிரமுகராகவும் உள்ளார். டப்பிங் சங்க தலைவராகவும் உள்ள ராதாரவி அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
சிம்பு கிட்ட இப்படியொரு திறமை இருக்கா.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த லாக்டவுன்.. குவியுது பாராட்டு!
கோத்தகிரி பங்களா
கடைசியாக டகால்டி என்ற படத்தில் நடித்தார் நடிகர் ராதாரவி. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்த ராதா ரவி தற்போது பாஜகவில் பேச்சாளராக உள்ளார். சென்னையில் வசித்து வரும் நடிகர் ராதாரவி கடந்த 10ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனது சொகுசு பங்களாவுக்கு சென்றார்.
வீட்டிலேயே தனிமை
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ராதாரவி குடும்பத்துடன் கோத்தகிரிக்கு சென்றுள்ளார். ராதாரவி கோத்தகிரி வந்த தகவலை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை குடும்பத்துடன் அவரது வீட்டிலேயே தனிமைப் படுத்தி உள்ளனர்.
வீட்டின் முன்பு ஸ்டிக்கர்
இதுதொடர்பான ஸ்டிக்கரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராதாரவியின் வீட்டின் முன்பு ஒட்டியுள்ளனர். தொடர்ந்து நடிகர் ராதா ரவியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் முறையான அனுமதி பெற்றே சென்றது தெரிய வந்தது.
சளி மாதிரிகள்
தொடர்ந்து ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதற்காக அவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சொகுசு பங்களாவிலேயே ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை முதலிடம்
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் சென்னைதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நடத்தப்படும் சோதனையாக ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேனியில் பாரதிராஜா
கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரது வீட்டின் முன்பும் ஸ்ட்டிக்கர் ஒட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!