Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதை மட்டும் தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்க.. தமிழக அரசுக்கு ராகவா லாரன்ஸ் திடீர் வேண்டுகோள்!
சென்னை: தன்னார்வலர்கள் பொருட்கள் வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார், நடிகர் ராகவா லாரன்ஸ்.
Recommended Video
தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெரினாவுக்கு முன்னாடி.. இந்த பெண் இயக்குநர் படத்தில் தான் சிவகார்த்திகேயன் அறிமுகம் ஆகவேண்டியது!
பாராட்டுகிறேன்
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 12, 2020 |
மறுபரிசீலனை
அதே நேரம், ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 'இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ, உணவுப் பொருட்கள் வழங்கக் கூடாது' என்று விதிக்கப்பட்டுள்ள தடையை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சேவை திட்டங்கள்
ஏனெனில், அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களைத் தந்திட இயலாது என்பதே யதார்த்தம். அதனால், ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் எனும் நல்லெண்ணத்திலேயே, கடந்த வாரம் கொரோனா தடுப்பு நிவாரண நிதி அளித்த கையோடு அடுத்த கட்டமாக, வரும் 14 ஆம் தேதி என் நண்பர்கள் மற்றும் அரசுடன் இணைந்து சில சேவை திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறோம்.
அதிர்ச்சியாக உள்ளது
இந்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு, அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு இப்படிச் செய்யலாம், தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருட்களை வழங்குகிற நடைமுறையில் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதை காவல்துறை துணையோடு கடைப்பிடிக்க உத்தரவிடலாம்.
உதவக் கூடாது
காய்கறி, பழங்களை இலவசமாகக் கொடுக்கக் கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிறவர்கள் இருக்கிற இதே நாட்டில்தான், அன்பை அளவில்லாமல் கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.