Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சகோதரா.. உங்கள் குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.. தீப்பெட்டி கணேசன் மறைவு.. லாரன்ஸ் உருக்கம்!
சென்னை: நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணத்தை தொடர்ந்து அவரது குழந்தைகளை தான் கவனித்துக் கொள்வதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்திருப்பது நெகிழ வைத்துள்ளது.
ரேனிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா என சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.
கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன். இந்நிலையில் கடந்த ஆண்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.
பிரபலங்கள் உதவி
தனக்கு அஜித் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார் தீப்பெட்டி கணேசன். அவரது வீடியோ பெரும் வைரலானது. இதனை பார்த்த திரைத்துரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவினர். சினேகன், ராகவா லாரன்ஸ் என பலரும் தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்தனர்.
மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். கடந்த 10 நாட்களாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீப்பெட்டி கணேசன், நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
உருக்கமான பதிவு
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தீப்பெட்டி கணேசனுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.
என்னால் இயன்றளவு
நடிகர் தீப்பெட்டி கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனிவரும் காலத்திலும் என்னால் இயன்றவரையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன்.
நெகிழ வைக்கும் பதிவு
கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். சகோதரா நான் உங்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன்.. உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும் என பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த நெகிழ வைக்கும் பதிவை பார்த்த நெட்டிசன்கள் லாரன்ஸுக்கு நன்றி கூறி வருகின்றனர்.