Don't Miss!
- News உலகின் சிறந்த ஏர்போட்! முதலிடத்தில் பயங்கர ட்விஸ்ட்.. லிஸ்டில் 2 தென்னிந்திய விமான நிலையங்கள்.. செம
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு!
மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து, நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் கலக்கிக்கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். தாய் மீது அதிக பாசம் கொண்ட ராகவா லாரன்ஸ், அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டு வருகிறார். மேலும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் தனது விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது, " என்னிடன் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு நான் அவர்களுக்கு உதவுகிறேன். எந்த பதிவையும் நான் புறக்கணிப்பது இல்லை.
நிறைய பேர் என்னிடம் உதவிக்கேட்டு வரும் போது, தனி மனிதனாக என்னால் அனைத்தையும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நான் அரசாங்கத்தின் உதவியை நாட முயற்சிக்கிறேன்.
முந்தைய காலங்களில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து உதவி கேட்டிருக்கிறேன். அவர்களும் தட்டாமல் நான் கேட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள்.
தற்போது நிறைய பேர் என்னிடம் உதவி கேட்டு வருவதால் அரசின் உதவியை நாடுவது என முடிவு செய்துள்ளேன். எனவே நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அவர்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். கூடிய விரைவில் உங்கள் வீட்டிற்கு வந்து நேரில் சந்திக்கிறேன்", என லாரன்ஸ் கூறியிருந்தார்.
அதன்படி இன்று அவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார். தனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருவதாக அமைச்சர் ஒத்துக்கொண்டதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உதவி தேவைப்படுபவர்களை கூடிய சீக்கிரம் தேடி வந்து சந்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!