Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுவிட்டு கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி.. நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியிருப்பது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் முழுக்க ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நிச்சயம் நடிகர் ரஜிகாந்துக்கு ரசிகர்களும் இருப்பார்கள்.
வாழ்நாளில் ரஜினியை ஒரு முறை சந்தித்தால் போதும் என்று நினைக்கும் ரசிகர்களும் உண்டு. ரஜினிகாந்தும் தன்னை பார்க்க விரும்பும் ரசிகர்கள் குறித்த தகவலை அறிந்தால் வீட்டிற்கே அழைத்து மரியாதை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம்? த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்!
ரஜினி ரசிகை
இந்நிலையில் அப்படி ஒரு தீவிர ரசிகையின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதாவது, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராகவா. இவரது மனைவி ஜெகதீஷ்வரி.
நிறைமாத கர்ப்பிணி
ஜெகதீஷ்வரி ரஜினியின் தீவிர ரசிகையாம். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெகதீஷ்வரி, ரஜினியை சந்திக்க வேண்டும் என கணவரிடம் கூறியிருக்கிறார்.
காத்திருந்த கணவர்
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டுவிட்டாரே எப்படியாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என பல நாட்களாக போயஸ் கார்டன் பகுதியில் காத்திருந்திருக்கிறார் கணவர் ஜெகதீஷ்.
ஏதோ விஷயம் போல
ஒருமுறை அவரைப் பார்த்த ரஜினிகாந்த் என்ன விஷயம் என்று கேட்க, தனது மனைவி உங்களைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் ராகவா. ஆனால், ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தான் தன்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக எண்ணிய ரஜினிகாந்த் அதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார்.
விஷயத்தை சொன்ன கணவர்
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ராகவாவை அப்பகுதியில் பார்த்த ரஜினிகாந்த் என்ன என்று மீண்டும் கேட்டுள்ளர். அப்போது தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், உங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவதாகவும் விஷயத்தை கூறியிருக்கிறார் ராகவா.
முன்பே சொல்லியிருக்கக்கூடாதா?
இதற்காகத்தான் தான் தினமும் போயஸ் கார்டனில் தங்களது வீட்டின் முன்பு காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரஜினிகாந்த் இதை முன்பே சொல்லியிருக்கக்கூடாது? என கேட்டுவிட்டு தம்பதியை உடனடியாக நேரில் சந்தித்துள்ளார்.
கண்ணாடி வளையல்
அப்போது ஜெகதீஸ்வரிக்கு தன் கைகளால் கண்ணாடி வளையல் அணிவித்து அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த். மேலும் அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
|
வைரலாகும் போட்டோஸ்
கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு ரஜினிகாந்த் வளையல் போட்டுவிடும் போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்