Don't Miss!
- Automobiles
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- Lifestyle
இந்த விஷயங்கள மட்டும் நீங்க தெரிஞ்சிகிட்டா... இனி காலிஃபிளவர் இலைகள தூக்கி எறியமாட்டீங்களாம்..!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- News
16 வயசு சிறுமி மாரடைப்பால் பலி! முதல் 6 நிமிடங்கள் முக்கியம்.. குழந்தைகளிடம் இந்த அறிகுறிகளை பாருங்க
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- Technology
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தனது ஓவியங்களால் வீட்டையே மியூஸியமாக மாற்றிய ரசிகர்.. வீட்டிற்கு அழைத்து கட்டிப்பிடித்த ரஜினி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சிலரை அழைத்து வீட்டில் வைத்து சந்திப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் ரஜினி.
தள்ளிப்
போகும்
டாப்
நடிகரின்
படம்..
சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக்
கொண்ட
பிரைட்
நடிகர்!

அரசியல் பிரச்சனைகள்
அந்த வகையில் அண்மையில் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும் கர்ப்பிணி ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்தார். அந்த போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகிறார்.

ஓவியர் ரசிகர்
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நேற்று ஹஜ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்த். இன்று இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்தார். இந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த ஓவியர் சுந்தர், கடந்த பல ஆண்டுகளாக தன் திறமையால் தனது வீட்டையே ரஜினியின் ஓவியத்தால் அலங்காரம் செய்து வருகிறார்.

குடும்பத்துடன் சந்திப்பு
ரஜினி பிறந்தநாளான கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுந்தர் தனது வீட்டில் வரைந்த ஓவியங்களை சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்தனர். இதனையடுத்து, சுந்தரை இன்று நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது மனைவி, மகளுடன் வந்த சுந்தர், ரஜினியை சந்தித்து தான் வரைந்த ரஜினி ஓவியத்தை பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
|
கட்டியணைத்த ரஜினி
ஓவியம் வரைந்த சுந்தரை ரஜினி கட்டியணைத்து பாராட்டினார் ரஜினிகாந்த். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்ற ரசிகரையும் வீட்டிற்கு அழைத்து கட்டியணைத்து போட்டோ எடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
|
வாய் பேச முடியாத
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ரசிகரான முகமது ஜக்கிரியா ஜானி படம் முதல் கடைசியாக வெளியான தர்பார் படம் வரை ரஜினியின் படம் குறித்து பல கடிதங்களை நடிகர் ரஜினிகாந்துக்கு எழுதியிருக்கிறார். இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து பல பதில் கடிதங்களையும் பெற்றிருக்கிறார். அந்த ரசிகரை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்துள்ளார்.