Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தனது ஓவியங்களால் வீட்டையே மியூஸியமாக மாற்றிய ரசிகர்.. வீட்டிற்கு அழைத்து கட்டிப்பிடித்த ரஜினி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சிலரை அழைத்து வீட்டில் வைத்து சந்திப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் ரஜினி.
தள்ளிப் போகும் டாப் நடிகரின் படம்.. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பிரைட் நடிகர்!
அரசியல் பிரச்சனைகள்
அந்த வகையில் அண்மையில் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும் கர்ப்பிணி ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்தார். அந்த போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகிறார்.
ஓவியர் ரசிகர்
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நேற்று ஹஜ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்த். இன்று இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்தார். இந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த ஓவியர் சுந்தர், கடந்த பல ஆண்டுகளாக தன் திறமையால் தனது வீட்டையே ரஜினியின் ஓவியத்தால் அலங்காரம் செய்து வருகிறார்.
குடும்பத்துடன் சந்திப்பு
ரஜினி பிறந்தநாளான கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுந்தர் தனது வீட்டில் வரைந்த ஓவியங்களை சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்தனர். இதனையடுத்து, சுந்தரை இன்று நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது மனைவி, மகளுடன் வந்த சுந்தர், ரஜினியை சந்தித்து தான் வரைந்த ரஜினி ஓவியத்தை பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
|
கட்டியணைத்த ரஜினி
ஓவியம் வரைந்த சுந்தரை ரஜினி கட்டியணைத்து பாராட்டினார் ரஜினிகாந்த். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்ற ரசிகரையும் வீட்டிற்கு அழைத்து கட்டியணைத்து போட்டோ எடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
|
வாய் பேச முடியாத
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ரசிகரான முகமது ஜக்கிரியா ஜானி படம் முதல் கடைசியாக வெளியான தர்பார் படம் வரை ரஜினியின் படம் குறித்து பல கடிதங்களை நடிகர் ரஜினிகாந்துக்கு எழுதியிருக்கிறார். இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து பல பதில் கடிதங்களையும் பெற்றிருக்கிறார். அந்த ரசிகரை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்துள்ளார்.