Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
20 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகர் ஒருவர் இணைந்து நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
போலி இ-மெயில் விவகாரம்.. கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஹிரித்திக் ரோஷன்.. பாலிவுட் பரபரப்பு!
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா, பின்னர் வீட்டில் தனிமையில் இருந்தார். அண்மையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ்வானதாக தகவல் வெளியானது.
40வது படத்தில்
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் 40வது படம் குறித்த தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகர் சூர்யா தற்போது தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ்
இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடிக்கிறார். இதில் சத்யராஜ், சரண்யா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இணைந்த ராஜ்கிரண்
இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் படத்தை வரும் ஆயுத பூஜை நாளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணைந்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் ராஜ் கிரண் சூர்யாவுடன் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.