Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உன் இழப்பை ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது... ராஜ்கிரணின் மனதை உருக்கும் கவிதை !
சென்னை : விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராஜ் கிரண் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
Recommended Video
அந்த கவிதை தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா? இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி
திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எக்மோ சிகிச்சை
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறுதிச்சடங்கு
மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விவேக் மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார்.
உருக்கமான கவிதை
நடிகர் விவேக் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராஜ்கிரண் விவேக் மறைவு குறித்து இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்த
போதெல்லாம்,
அன்பைத்தேடிப்போனாய்
அறிவைத்தேடிப்போனாய்
பண்பைத்தேடிப்போனாய்
எல்லாவற்றையும் என்னால்
புரிந்து கொள்ள முடிந்தது,
மகிழ்ச்சியாய் இருந்தது...
இப்பொழுது,
தாயைத்தேடிப்போனாயோ
தனயனைத்தேடிப்போனாயோ
யாரை நம்பிப்போனாயோ
எதையுமே என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை,
மனம் தவிக்கிறது...
என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது...
நடிகர் ராஜ்கிரணின் இந்தக் கவிதை ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது .