Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே... ராஜ்கிரண் காட்டம்
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே, அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்களே என்று கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதால் நாட்டின் மற்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் விடுபட்டுள்ளதையும், இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாததையும் கண்டித்து போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.
பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,
காலங்காலமாக
புளித்துப்போன விசயம்...
இஸ்லாமியர்கள்,
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்
அவர்களது நாடு என்பது போலவும்,
பாமர மக்களின் மனங்களில்
பிரிவினையை உண்டாக்குவதற்கான,
நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக
விதைத்து வந்தனர், வருகின்றனர்...
இந்த பொய்ப்பிரச்சாரங்கள்
ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது...
சத்தியத்தை யாராலும் புதைத்து விட
முடியாது...
இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்
இந்துக்களின் இரத்த சொந்தங்கள்...
இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,
இன்ன பிற கொடுமைகளால்,
அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து,
சுய மரியாதையைப்பேணவும்,
சமத்துவத்தை அனுபவிக்கவும்,
அதற்கு வழி வகுத்துத்தந்த
இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு
மாறியவர்கள்...
ஒவ்வொரு மனிதனும்,
தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வது,
அவனவனுடைய அடிப்படை சுதந்திரம்.
இதை "இந்திய அரசியல் சாசன சட்டம்"
உறுதி செய்திருக்கிறது...
ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த
பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான
வாழ்க்கை முறையை
தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லையா,
அதே போலத்தான் இதுவும்...
எல்லா மதத்தினரும்
இந்திய தேசத்தின் பிள்ளைகளே...
என் தகப்பனாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மறவர் குலம்.
என் தாயாரின் மூதாதையர்கள்,
சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்.
எனது மூதாதையர் காலத்தில்,
சேதுபதிச்சீமையில்,
பள்ளு, பறை என்று 18 சாதிகள்
இருந்தனவென்றும்,
அவர்களில் பெரும்பாலானோர்
இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி,
சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக்
கொண்டார்கள் என்றும், என் தாயார்
எனக்கு சொல்லியிருக்கிறார்கள்...
அதனால், எல்லா சாதியிலும்
எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு...
பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு.
அதில் மனித நேயமே மாண்பு..
என்று நடிகர் ராஜ்கிரண் தனது பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டு இருக்கிறார்.