Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை!
சென்னை: பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சொந்தங்கள் சூழ.. நடிகர் 'நந்தினி' ராகுல் ரவி திருமணம்..காதலியை கரம்பிடித்தார்.. ரசிகர்கள் வாழ்த்து!
இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சரிந்து வருகிறது
இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடு நீட்டிப்பு
படிப்படியான தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் ஜனவரி 31- ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப் பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சினிமா பிரபலங்கள்
இந்நிலையில் இந்த கொரோனாவால் ஏராளமான சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தமன்னா, ராஜமவுலி, விஷால், பிருத்விராஜ், ஜெனிலியா, நிக்கி கல்ராணி, டாக்டர் ராஜசேகர், ஜீவிதா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ராம் சரண் தேஜா
சிகிச்சைக்குப் பின்னர் மீண்டனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோவும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் தெரியவந்ததாக, சமூக வலைதளப் பக்கத்தில் இன்று காலை உறுதி செய்துள்ளார்.
வலிமையோடு திரும்புவேன்
தனக்கு அறிகுறி இல்லை என்றாலும் மருத்துவர்கள் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் நலம்பெறுவேன் என்றும் வலிமையுடன் திரும்புவேன் என்று கூறியுள்ள அவர், கடந்த சில நாட்களாக தன்னைச் சந்தித்தவர்கள் கொரோனா சோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆச்சார்யா ஷூட்டிங்
சில நாட்களுக்கு முன் அவர், சீரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிரஞ்சீவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். பிறகு பரிசோதனை கருவி தவறாக காண்பித்ததால் ஏற்பட்ட சிக்கல் என்று தெரியவந்தது.