Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை!
சென்னை: பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடுமையானப் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சொந்தங்கள் சூழ.. நடிகர் 'நந்தினி' ராகுல் ரவி திருமணம்..காதலியை கரம்பிடித்தார்.. ரசிகர்கள் வாழ்த்து!
இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சரிந்து வருகிறது
இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடு நீட்டிப்பு
படிப்படியான தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் ஜனவரி 31- ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப் பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சினிமா பிரபலங்கள்
இந்நிலையில் இந்த கொரோனாவால் ஏராளமான சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தமன்னா, ராஜமவுலி, விஷால், பிருத்விராஜ், ஜெனிலியா, நிக்கி கல்ராணி, டாக்டர் ராஜசேகர், ஜீவிதா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ராம் சரண் தேஜா
சிகிச்சைக்குப் பின்னர் மீண்டனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோவும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் தெரியவந்ததாக, சமூக வலைதளப் பக்கத்தில் இன்று காலை உறுதி செய்துள்ளார்.
வலிமையோடு திரும்புவேன்
தனக்கு அறிகுறி இல்லை என்றாலும் மருத்துவர்கள் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் நலம்பெறுவேன் என்றும் வலிமையுடன் திரும்புவேன் என்று கூறியுள்ள அவர், கடந்த சில நாட்களாக தன்னைச் சந்தித்தவர்கள் கொரோனா சோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆச்சார்யா ஷூட்டிங்
சில நாட்களுக்கு முன் அவர், சீரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிரஞ்சீவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். பிறகு பரிசோதனை கருவி தவறாக காண்பித்ததால் ஏற்பட்ட சிக்கல் என்று தெரியவந்தது.