Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போதைமருந்து வாங்கும்போது நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் கைது!
போதை மருந்து வாங்கும்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர்கள் மற்றும் நண்பர் ஆகிய மூவரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த உகாண்டாவைச் சேர்ந்த நபரும் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 50 கிராம் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஹைதராபாத் நகரில் உகாண்டா மற்றும் நைஜீரிய நாட்டு நபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதைக் கண்காணித்த போலீசார், அவர்களில் சிலரை கைது செய்து சோதனையிட்டனர். அவர்களிடம் போதைப் பொருள்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் உகாண்டாவைச் சேர்ந்த ஒரு நபர் ஹைதராபாத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்வதாக ஹைதராபாத் மேற்கு மண்டல துணை ஆணையர் ஸ்டீபன் ரவீந்திராவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த நபரை கடந்த இரு தினங்களாக ஸ்டீபன் ரவீந்திரா கண்காணித்து வந்தார்.
வியாழக்கிழமை அந்த நபருக்காக மூன்று பேர் காத்திருந்தனர். அவர்களில் இருவர் நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் ரகு பாபு மற்றும் பரத். மற்றொருவர் ரவி தேஜாவின் நண்பரும் ஹைதராபாதின் முக்கிய வர்த்தகர் ஒருவரது மகனுமான நரேஷ். இவர்கள் மூவரும் கருப்பு நிற பாந்தர் வண்டியில் காத்திருந்த போது, உகாண்டா நபர் அவர்களைச் சந்தித்து போதைப் பொருளைக் கொடுத்தார். அப்போது காத்திருந்த போலீசார் நால்வரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
போதை மருந்தை 1 கிராம் பொட்டலங்களாகக் கட்டி வைத்திருந்தார் உகாண்டா நபர். அவர் பெயர் சீமா கிளமெண்ட் என்கிற விக்டர். ஒரு கிராம் பொட்டலம் ரூ 4000 வரை விலை பேசப்பட்டதாகத் தெரிவித்தார். மொத்தம் 48 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
உடனடியாக ரவி தேஜாவின் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரவி தேஜாவின் பெயரில்தான் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தின் போது ரவி தேஜா ஒரு படப்பிடிப்புக்காக வட இந்தியா சென்றிருந்தார்.