ரோட்டில் பெண்ணுடன் நெருக்கம்.. விசாரித்த போலீசாருடன் தகராறு.. ரவிதேஜாவின் சகோதரர் கைது!

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். கவுரி ஹில்ஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று அவர் பேசிக் கொண்டிருந்தார். வெட்ட வெளியில் இருவரும் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். 'குடிபோதையில் ஒரு பெண்ணுடன் இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டனர்.
உடனே போலீசாருடன் பரத் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். மோசமான வார்த்தைகளில் பேசினார். இதனால், போலீசார் அவரைக் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். உடனிருந்த பெண் அங்கிருந்து நழுவிவிட்டார்.
உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்று சென்றார்.
ஏற்கெனவே போதை மருந்து வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் பரத் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











