Don't Miss!
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ரோட்டில் பெண்ணுடன் நெருக்கம்.. விசாரித்த போலீசாருடன் தகராறு.. ரவிதேஜாவின் சகோதரர் கைது!
பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். கவுரி ஹில்ஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று அவர் பேசிக் கொண்டிருந்தார். வெட்ட வெளியில் இருவரும் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். 'குடிபோதையில் ஒரு பெண்ணுடன் இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டனர்.
உடனே போலீசாருடன் பரத் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். மோசமான வார்த்தைகளில் பேசினார். இதனால், போலீசார் அவரைக் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். உடனிருந்த பெண் அங்கிருந்து நழுவிவிட்டார்.
உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்று சென்றார்.
ஏற்கெனவே போதை மருந்து வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் பரத் என்பது குறிப்பிடத்தக்கது.