Don't Miss!
- Finance தங்கம் விலை சவரனுக்கு ரூ.60000 தொடுமா.. பதறவைக்கும் ரிப்போர்ட்..!!
- News பொது விடுமுறை.. ஏப்.19 கோயம்பேடு மார்கெட்டுக்கு லீவு! முன்கூட்டியே காய்கறிகளை வாங்கி வெச்சுக்கோங்க!
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Sports GT vs DC : அந்த இந்திய வீரரை தான் மிஸ் செய்கிறோம்..ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக தாக்கிய ரஷீத் கான்!
- Automobiles ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ரோட்டில் பெண்ணுடன் நெருக்கம்.. விசாரித்த போலீசாருடன் தகராறு.. ரவிதேஜாவின் சகோதரர் கைது!
பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர் பரத் நேற்று அதிகாலை குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். கவுரி ஹில்ஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று அவர் பேசிக் கொண்டிருந்தார். வெட்ட வெளியில் இருவரும் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது மாதப்பூர் போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். 'குடிபோதையில் ஒரு பெண்ணுடன் இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டனர்.
உடனே போலீசாருடன் பரத் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். மோசமான வார்த்தைகளில் பேசினார். இதனால், போலீசார் அவரைக் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். உடனிருந்த பெண் அங்கிருந்து நழுவிவிட்டார்.
உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமீன் பெற்று சென்றார்.
ஏற்கெனவே போதை மருந்து வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் பரத் என்பது குறிப்பிடத்தக்கது.