Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
பாலியல் புகார் கூறிய நடிகை மீது ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு போட்ட நடிகர்
பெங்களூர்: தன் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த நடிகை மீது கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் வி. ரவிச்சந்திரன். அவரை கிரேஸி ஸ்டார் என்று அழைப்பார்கள். அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது,
பிந்தியா
ஹல்லிமேஸ்த்ரு படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் பிந்தியா. அவர் படப்பிடிப்பின்போது நான் அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக பேட்டி அளித்தார். இந்த பொய் குற்றச்சாட்டை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
வழக்கு
உண்மையை உலகிற்கு தெரிவிக்க நான் பிந்தியா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தேன். ஒரு ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தேன். பணத்திற்காக அல்ல உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்தவே வழக்கு தொடர்ந்தேன்.
உண்மை
நான் அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் அனைவர் முன்பும் உண்மையை தெரிவித்தார் பிந்தியா. அதன் பிறகே எனக்கு நிம்மதியாக இருந்தது.
பாடம்
எந்த தவறும் செய்யாமல் நான் நீதிமன்றம் சென்றேன். பிந்தியாவுக்கு பாடம் கற்பிக்கவே வழக்கு தொடர்ந்து அவர் வாயாலேயே உண்மையை உலகிற்கு சொல்ல வைத்தேன் என்றார் ரவிச்சந்திரன்.