Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்!
Recommended Video
சென்னை: நடிகர் வடிவேலு மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு வசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை. அஜித் நடிக்கும் புதிய படம் மற்றும் கமலின் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களில் அவர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நானும் நீயும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடிப்பதற்காக , வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட வடிவேலு, படப்பிடிப்பு வர மறுப்பதாகவும், படத்தின் கதையை மாற்ற வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் புகாரில் ஆர்.கே குறிப்பிட்டுள்ளார். தனது பணத்தை திரும்ப தரவில்லை என்றால், வடிவேலு நடிக்கும் புதிய படங்களை வெளியிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 24ம் புலிகேசி படப் பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளாக வடிவேலுவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. இப்போது தான் அந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிந்தது. இந்த நிலையில் ஆர்.கே.வின் இந்த புகாரால் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது.