Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்!
Recommended Video
சென்னை: நடிகர் வடிவேலு மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு வசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை. அஜித் நடிக்கும் புதிய படம் மற்றும் கமலின் தலைவன் இருக்கிறான் ஆகிய படங்களில் அவர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நானும் நீயும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடிப்பதற்காக , வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட வடிவேலு, படப்பிடிப்பு வர மறுப்பதாகவும், படத்தின் கதையை மாற்ற வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் புகாரில் ஆர்.கே குறிப்பிட்டுள்ளார். தனது பணத்தை திரும்ப தரவில்லை என்றால், வடிவேலு நடிக்கும் புதிய படங்களை வெளியிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 24ம் புலிகேசி படப் பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளாக வடிவேலுவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. இப்போது தான் அந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிந்தது. இந்த நிலையில் ஆர்.கே.வின் இந்த புகாரால் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது.