Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடப்பாவமே.. கொரோனா பாதிப்பால் தமிழ் நடிகர் மரணம்.. கில்லி படத்தில் கபடி போட்டி நடுவரே இவர் தான்
சென்னை: கில்லி, தூள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ரூபன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளார்.
குணசித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் நடிகர் ரூபன்.
நுரையீரல் புற்றுநோய் காரணமாகவும் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார்.
டிரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸில்... பூனை நடைபோட்டு வந்த பிக் பாஸ் பிரபலம்!
டிடிஆர் கதாபாத்திரம்
தமிழ் சினிமாவில் டிடிஆர் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனங்களில் இடம்பெறுவார். தரணி இயக்கத்தில் சியான் விக்ரம், ஜோதிகா நடிப்பில் வெளியான தூள் படத்தில் டிடிஆர் கதாபாத்திரத்தில் நடித்த ரூபன் நேற்று கொரோனா காரணமாக உயிரிழந்தது திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
கபடி போட்டி நடுவர்
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான மெகா பிளாக்பஸ்டர் படமான கில்லி படத்தில் கபடி போட்டியை நடத்தும் நடுவராக நடிகர் ரூபன் நடித்து இருப்பார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
54 வயது
சிறு சிறு வேடங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த ரூபன், சிறந்த கதாசிரியரும் கூட, ஏகப்பட்ட படங்களுக்கு கதாசிரியராகவும், துணை கதாசிரியராகவும் பணியாற்றி வந்தார். வாய்ப்பு கிடைக்கும் போது, அவ்வப்போது திரையில் தோன்றியும் ரசிகர்களை மகிழ்விப்பார். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அவருக்கு வயது 54.
நுரையீரல் புற்றுநோய்
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபனுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட, நேற்று மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகள் இல்லை
மறைந்த நடிகர் ரூபனுக்கு சங்கீதா என்ற மனைவி மட்டுமே உள்ளார். அவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. நடிகர் ரூபனின் மறைவை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் ரூபனின் மனைவிக்கு ஆறுதல்களையும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் தெரிவித்து வருகின்றனர்.