Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நடிகரின் திருமண மோசடி, செக்ஸ் டார்ச்சர்,4வது திருமணத்திற்கு முயற்சி: 3வது மனைவி புகார்
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் செல்வராஜா(55). அவர் என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவரது மனைவி அன்னை ரீட்டா (24). அவரும் ஒரு சித்த மருத்துவர்.
இந்நிலையில் ரீட்டா வடபழனி காவல் நிலையத்தி்ல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,
செல்வராஜா தனது மருத்துவமனையில் வேலைக்கு டாக்டர் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். அதைப் பார்த்து வேலைக்கு சேர்ந்தேன். அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி என்னிடம் பழகினார். இதனால் அவரை நம்பி காதலித்தேன். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சேர்ந்து கிளினிக் நடத்தி வந்தோம்.
நான் வீடுகளுக்கும் சென்று சிகிச்சை அளிப்பேன். இதனால் அவருக்கு என் மீது சந்தேகம் வந்தது. யாரோடு பேசினாலும் சந்தேகக் கண்ணோடு பார்க்க தொடங்கினார். வீட்டிற்குள் கேமரா பொருத்தி கண்காணித்தார்.
வீட்டிற்குள் தனி அறையில் அடைத்து 'செக்ஸ்' தொந்தரவும் கொடுத்தார். இதனால் எனக்கு அவரோடு வாழ பிடிக்கவில்லை. அவரோடு வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் நரகம் போல் ஆகிவிட்டது. எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன். அவரால் எனக்கு தொந்தரவு ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து இருக்கிறார். முதல் மனைவி பெமிலா. அவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டியில் வசித்து வருகிறார். 2வதாக தேவிகா என்ற டாக்டர் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். அவர் வளசரவாக்கத்தில் வசிக்கிறார்.
ஏற்கனவே 2 திருமணம் செய்ததை மறைத்துதான் என்னை ஏமாற்றி 3வது மனைவியாக்கி இருக்கிறார். இப்போது 4வதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். என்னோடு அவரது திருமண மோசடி வித்தைகள் முடிந்து போகட்டும். வேறு எந்த பெண்ணும் ஏமாந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் குழலி ரகசியமாக விசாரணை நடத்தி வந்தார்.
இந் நிலையில் செல்வராஜா எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் அனைத்து பொருட்களையும் அள்ளி சென்று விட்டனர். அதோடு எனது மனைவி அன்னை ரீட்டாவையும், மாமியாரையும் கடத்தி சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அன்னை ரீட்டா வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் செல்வராஜா பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அவரது 4வது திருமணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையைப் பொறுத்து தான் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம் என்றார்.