Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரஜினியை குறை கூறுவது அராஜகம்.. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. எஸ்.வி.சேகர் பாய்ச்சல்!
சென்னை : நடிகர் ரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்று நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நேதாஜி 124வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் எஸ்.வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர் எனவும் அவரது போர்குணம் எல்லோருக்கும் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பெரியார் குறித்து இல்லாத ஒன்றை கூறியதாக அனைவரும் நடிகர் ரஜினியை குறைகூறுவது அராஜகம் எனவும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் சமமான ஒன்று எனவும் தெரிவித்தார்.
மேலும், ஈ.வெ.ரா பேசிய காலத்தில் இவ்வளவு தொலைக்காட்சிகள் இல்லை எனவும் அவரது கருத்துகள் குறித்து மறுப்புகள் வரும்போது அது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரமே வேண்டாம் என பெரியார் பேசியதாக கூறப்படுகிறது. வரலாற்றை யாரும் எளிதாக மறைத்துவிட முடியாது என்று கூறினார்.