Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினியை குறை கூறுவது அராஜகம்.. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. எஸ்.வி.சேகர் பாய்ச்சல்!
சென்னை : நடிகர் ரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்று நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நேதாஜி 124வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் எஸ்.வி சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் முக்கியமானவர் எனவும் அவரது போர்குணம் எல்லோருக்கும் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பெரியார் குறித்து இல்லாத ஒன்றை கூறியதாக அனைவரும் நடிகர் ரஜினியை குறைகூறுவது அராஜகம் எனவும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் சமமான ஒன்று எனவும் தெரிவித்தார்.
மேலும், ஈ.வெ.ரா பேசிய காலத்தில் இவ்வளவு தொலைக்காட்சிகள் இல்லை எனவும் அவரது கருத்துகள் குறித்து மறுப்புகள் வரும்போது அது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரமே வேண்டாம் என பெரியார் பேசியதாக கூறப்படுகிறது. வரலாற்றை யாரும் எளிதாக மறைத்துவிட முடியாது என்று கூறினார்.