நாளை வெளியாகிறது சந்தானத்தின் டகால்டி திரைப்படம்
Recommended Video
சந்தானம் காமெடியனாக இருந்து பின்னாளில் ஹீரோ ஆனவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர்களில் சந்தானமும் ஒருவர்.
பலரும் படங்களில் காமெடி செய்வர். அதில் இருந்து வேறுபட்டு தனது காமெடியை வித்தியாசமாக கொடுத்தார் சந்தானம். திரையுலகில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து உள்ளார் சந்தானம்.

நடிகர் சிம்பு தான் இவரது காமெடி திறமையை வெளிக்கொண்டு வந்தார். சிம்பு உடன் மன்மதன் படத்தில் நடித்த பிறகு தான் இவர் அடையாளம் காட்ட பட்டார். காமெடியனாக இருந்த சந்தானம் பின் ஹீரோ ஆனார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சந்தானம். அப்படம் கலவையான விமர்சனம் கிடைத்தது. இரண்டாவது படமாக இனிமே இப்படிதான் படத்தில் நடித்தார் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சந்தானம் ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை.அப்படி இருக்கையில் வெளிவந்தது தான் ஏ1 கடந்த வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
சந்தானம் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.
இவர் நடித்துள்ள டகால்டி திரைப்படம் நாளை வெளியாகிறது. கடந்த வருடம் பெற்ற வெற்றியை போல இந்த ஆண்டும் சந்தானம் வெற்றியுடன் ஆரம்பிப்பார் என்று பலரால் நம்பப்படுகிறது.
இது ஒரு பக்கா காமெடி திரைப்படம் முதல் முறையாக சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து உள்ளனர்.
சந்தானம் அவரது ஸ்டைலில் காமெடி செய்வார்.யோகி பாபுவும் அவரது ஸ்டைலில் காமெடி செய்வார்.
இந்த இருவரும் சேர்ந்தால் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.இப்படத்தை விஜய் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்திரி தயாரிக்கிறார்.

சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தானத்தின் காமெடியை ரசிப்பார்கள் அந்த வகையில் நாளை படங்கள் திரையிடும் திரையரங்குகளில் கல்லா கட்டும்.
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நல்ல லாபம் தரும் என்று கூறப்படுகிறது.சந்தானத்தின் இந்த வருட வெற்றி டகால்டி உடன் துவங்கபோகிறது.


Click it and Unblock the Notifications











