Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மறைந்த நடிகர் சேதுராமனின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்.. அந்த போட்டோவை வெளியிட்டு உருக்கம்!
சென்னை: மறைந்த நடிகர் சேதுராமனின் ஸ்கின் கிளினிக்கை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நடிகர் சேதுராமன்
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் திரைத்துறையை சேர்ந்த பலருடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். தோல் சிகிச்சை நிபுணரான அவர் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.
ஒரு பெண் குழந்தை
சேதுராமன் இறந்த போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணி மனைவியையும் ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்த நிலையில் சேதுராமன் அகால மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆண் குழந்தை பிறந்தது
கடந்த ஆகஸ்ட் மாதம் சேதுவின் மனைவி உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் சந்தானம் சேதுராமனின் Zi Clinic கிளையை சென்னை ஈசிஆரில் திறந்து வைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போதுதான் நடிகர் சேது மரணமடைந்தார்.
திறந்து வைத்ததில் மகிழ்ச்சி
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்தானம், என் நெருங்கிய நண்பரான சேதுராமனின் ஸீ கிளினிக்கை ஈசிஆரில் அவரது பிறந்தநாளில் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
ஒன்றாக இருந்த போட்டோ
மேலும் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் சந்தானம். சேதுராமனின் இறுதிச்சடங்கில் நடிகர் சந்தானம் பங்கேற்றார். அப்போது நண்பரான சேதுராமனின் உடலை கதறியப்படியே சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.