Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி..காரணம் இதுதான்!
சென்னை : நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சரத்குமாருக்கு வயிறு பிரச்சனை இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.
மதுவுக்கு அடிமையானேன்..சரக்கு அடித்தால் தான் தூக்கமே வரும்..மனம் திறந்த பிரபல நடிகை!
நடிகர் சரத்குமார்
தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர் சூப்ரீம் ஸ்டார் சரத்குமார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட சரத்குமார், உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார். இவருக்கு 67 வயதாகிவிட்டது என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு செம பிட்டாக இளமையானத் தோற்றத்துடன் இருக்கிறார்.
பெரிய பழுவேட்டரையர்
வில்லனாக, ஹீரோவாக கலக்கி வந்த சரத்குமார், தற்போது அப்பா, அண்ணன் போன்ற குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். ரஜினி நடிக்க ஆசைபட்ட பெரிய பழுவேட்டரையர் ரோல் இவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.
வாரிசு படத்தில்
இந்த படத்தை அடுத்து தமிழ்,தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் அண்ணணாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
மருத்துவமனையில் சரத்குமார்
இந்நிலையில்.ஐதராபாத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது நடிகர் சரத்குமாருக்கு சளி மற்றும் வயிறு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதையடுத்து, சென்னை திரும்பிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர், நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி ராதிகாவும், மகள் வரலட்சுமியும் இருக்கின்றனர்.
பிஸியாக பல படங்களில்
நடிகர் சரத்குமார் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராகுல் என்கிற ஒரு மகன் உள்ளார். அதே போல், இவருடைய முதல் மனைவி சாயாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த பெண்ணான வரலட்சுமி சரத்குமார் இவர், பல போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.