twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி..காரணம் இதுதான்!

    |

    சென்னை : நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சரத்குமாருக்கு வயிறு பிரச்சனை இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.

    மதுவுக்கு அடிமையானேன்..சரக்கு அடித்தால் தான் தூக்கமே வரும்..மனம் திறந்த பிரபல நடிகை!மதுவுக்கு அடிமையானேன்..சரக்கு அடித்தால் தான் தூக்கமே வரும்..மனம் திறந்த பிரபல நடிகை!

    நடிகர் சரத்குமார்

    நடிகர் சரத்குமார்

    தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர் சூப்ரீம் ஸ்டார் சரத்குமார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட சரத்குமார், உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார். இவருக்கு 67 வயதாகிவிட்டது என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு செம பிட்டாக இளமையானத் தோற்றத்துடன் இருக்கிறார்.

    பெரிய பழுவேட்டரையர்

    பெரிய பழுவேட்டரையர்

    வில்லனாக, ஹீரோவாக கலக்கி வந்த சரத்குமார், தற்போது அப்பா, அண்ணன் போன்ற குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். ரஜினி நடிக்க ஆசைபட்ட பெரிய பழுவேட்டரையர் ரோல் இவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.

    வாரிசு படத்தில்

    வாரிசு படத்தில்

    இந்த படத்தை அடுத்து தமிழ்,தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் அண்ணணாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

    மருத்துவமனையில் சரத்குமார்

    மருத்துவமனையில் சரத்குமார்

    இந்நிலையில்.ஐதராபாத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது நடிகர் சரத்குமாருக்கு சளி மற்றும் வயிறு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதையடுத்து, சென்னை திரும்பிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர், நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி ராதிகாவும், மகள் வரலட்சுமியும் இருக்கின்றனர்.

    பிஸியாக பல படங்களில்

    பிஸியாக பல படங்களில்

    நடிகர் சரத்குமார் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராகுல் என்கிற ஒரு மகன் உள்ளார். அதே போல், இவருடைய முதல் மனைவி சாயாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த பெண்ணான வரலட்சுமி சரத்குமார் இவர், பல போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    English summary
    Tamil actor and filmmaker SarathKumar has been admitted to a private hospital in Chennai, according to multiple reports.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X