Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்... நடிகர், நடிகைகள் இரங்கல்!
கோழிக்கோடு: பிரபல மலையாள நடிகர் மரணமடைந்ததை அடுத்து, திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் சசி கலிங்கா. சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள, இவர் கடந்த சில வருடங்களாக கல்லீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, உடல்நிலை மோசமானதை அடுத்து கோழிகோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
வி.சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், சினிமாவுக்காக சசி கலிங்கா என்று பெயரை மாற்றிக்கொண்டார். நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இவர்.
ரஞ்சித் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த பலேரி மாணிக்யம், ஆதமின்டே மகன் அபு, ஆமென், வெள்ளிமூங்கா, மோகன்லாலில் புலி முருகன் உட்பட பல முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த சசி கலிங்காவுக்கு மலையாள நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள இசை அமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் நேற்று காலமானார்.
கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், அவரது இறுதிச்சடங்கில் அதிகமானோர் கலந்துகொள்ள இயலவில்லை. இன்று இன்று சசி கலிங்கா மறைந்திருப்பதால், அவரது இறுதிச் சடங்குக்கு திரையுலகினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.